Posts

புதிய கல்விச் சீர்திருத்தம் - 2025

இலக்கு  21 ஆம் நூற்றாண்டின் மற்றும் அதற்குப் பிந்திய சவால்களுக்குத் தயாராக இருக்கும் ஒரு குடிமகனை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பது, மற்றும் நிலையான தேசிய வளர்ச்சி மற்றும் நாட்டின்அமைதிக்கான செயற்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தல். நோக்கங்கள் ❖ பாடத்திட்ட பொருத்தத்தையும் தரத்தையும் மேம்படுத்துதல். ❖ கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல். ❖ அறிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் சேர்க்கையை அதிகரித்தல.; ❖ நிலைபேண் விருத்தி இலக்குகள் மற்றும்  (SDGs) மற்றும் குடியியல்                கல்வியை உயர்த்துதல். ❖ 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை வளர்த்தல். ❖ தரத்தையும் மற்றும் உலகமயமாதலையும் உறுதி செய்தல். ❖ பாடசாலையுடனான சமூக தொடர்புகளை உறுதிப்படுத்தல். ❖ தேசிய கல்வி இலக்குகளுடன் (NEGs) ஒத்துப்போதல். ❖ வேலை உலகுக்குத் தயார்படுத்துதல். கல்வி  சீர்த்திருத்தங்கள் 01. பாடத்திட்ட அபிவிருத்தி 02. மனித வள மேம்பாடு 03. உட்கட்டமைப்பு வசதிகளும் கல்வி நிர்வாக சீர்திருத்தங்களின் மேம்பாடு 04. கணிப்பீடு மற்றும் மதிப்பீடு 05. மக்களுக்கு தெளி...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2000 ரூபா தாள் நாணயம்

Image
இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று புழக்கத்தில் விடப்பட்ட ரூ. 2000 மதிப்புள்ள நினைவு நாணயத் தாளை வெளியிட்டது. இந்த நாணயத் தாளானது, தேசிய வளர்ச்சிக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கான மத்திய வங்கியின் நீடித்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், "செழிப்புக்கான ஸ்திரத்தன்மை" என்ற ஆண்டு விழா கருப்பொருளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. இது CBSL ஆல் வெளியிடப்பட்ட 5வது நினைவு நாணயத் தாளாகும். இன்று முன்னதாக, இந்த நினைவு நாணயத் தாளானது, ஜனாதிபதி செயலகத்தில், மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களால் கௌரவ ஜனாதிபதி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

05.08.2013 இன்று அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ரதோற்சவ வைபவம் .

Image
05.08.2013 இன்று அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ரதோற்சவ வைபவம் கோலாகலமாக இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் 2 ஆம் வகுப்பின் II ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடை தாண்டற் பரீட்சை - 2013

செயல்நிலை ஆய்வு - 2013

Image
அறிமுகம் செயல்நிலை ஆய்வு என்பது ஒரு பிரச்சினையை இணங்கண்டு தீர்வுக்காக திட்டமிடுதலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவுகளை அறிதலும் ஆகிய மூன்று படிகளைக் கொண்ட சுழற்சி செயன்முறையாகும். தலைப்பு வவுனியா  தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தரம் 06 மாணவர்களிடத்தில் ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை வகை குறிக்கும் ஆற்றலை மேம்படுத்தல். ஆய்வாளர் பெயர்                  :-   சிவராசா சிவறமணன் பாடசாலையின் பெயர்          :-   வவுனியா தரணிக்குளம் கணேஷ்                                                                                              வித்தியாலயம் மேற்பார்வை விரிவுரையாளர்  :-   திரு. கு.கமலகுமார் கால வரையறை   ...

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்

தமிழில் ஒன்று,இரண்டு,மூன்று...என்று எண்ணுகிறோம்.பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று வருகிறது?நூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறது?ஆயிரம் ஆயிரமாக எண்ணும் போது எட்டாயிரத்துக்கு அடுத்து தொள்ளாயிரம் என்று வராமல் ஒன்பதாயிரம் என்று ஏன் வருகிறது.பத்தாயிரம் பத்தாயிரமாக எண்ணும் போது எண்பதாயிரம் அடுத்து ஒன்பதாயிரம் என்று வராமல் ஏன் தொண்ணூறாயிரம் என்று வருகிறது.ஒன்று ஒன்றாக எண்ணும் போது எட்டுக்க பெருக்கலை சுலபமாகக் கையாளுதல் (Tackling Multiplication) இந்த பாடத்தில் கட்டங்கள் அமைப்பு (Lattice Method) முறையின்படி பெருக்கல் கற்றுத்தரப்படும். கட்டங்கள் வரைந்து பெருக்கல் வழி என்பது பெரிய எண்களை ஒரு சட்டத்திற்குள் கட்டங்கள் வரைந்து பெருக்கலைச் செய்யும் ஒரு எளிமையான முறை ஆகும். பெருக்கலை சுலபமாகக் கையாளுதல் (Tackling Multiplication) பத்துக்களும் ஒன்றுகளும் (Tens and Ones) பலவகையான எண்களைப் பற்றிய கருத்துகளை கற்க உருவாக்கப்பட்டு வகுப்புகளில் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தபட்ட பாடங்கள் இங...

சமூகத்தில் சாரணிய இயக்கத்தின் பங்கு

இயக்கம் என்றால் மக்கள் மத்தியில் ஒரு   பீதி சாரணிய இயக்கத்திற்கு மகன்  செல்லப் போகின்றான் என்பதாகும். இயக்கம்  என்றால் மக்களை  பேசா மடந்தையாக்கும்  ஆயுத கோஷ்டி என்று மக்கள் எண்ணுகிறார்கள்.  ஆனால் சாரணியம் என்றால் முற்றிலும் வேறுபட்டது. இந்நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்கும் ஒரு அமைப்பே சாரணியமாகும். அதாவது எமது நாட்டு சிறுவர்களையும்ää இளைஞர்களையும் உள்வாங்கி எமது நாட்டின் எதிர்காலத்தை ஒரு தைரியமிக்க ஒரு நல்ல நாடாக மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட ஒரு அமைப்பே சாரணியம் ஆகும். ஒரு சாரணன் உண்மையாக தன்னை சாரணியம் எனும் அமைப்பினுள் உள்வாங்குகின்றானோ அன்றே எமது நாட்டிற்கு ஒரு நல்ல பிரஜையாக உருவாக்கப்படுகின்றான். சாரணியர்களுக்கான தேசிய ஜம்போறிää பாசறைகள் போன்றன  இடம்பெறுகின்றன. இந் நிகழ்வுகளிலே சாரணர்களுக்கிடையேயான ஒற்றுமை கட்டியெழுப்பப்படுகின்றன. அதாவது பிறருக்கு உதவும்ää ஒத்துழைக்கும் மனப்பாங்கு காணப்படுகின்றது. சாரணன் ஒருவன் சமுதாயத்தில் அநீதிகளை தட்டிக்கேட்பவனாக இருக்க வேண்டும் என்பதே அவனது இலக்காகும். மற்றும் தனது சமூகத்தில் நடக்கும் பிரச்...